menu

Saturday 20 June 2015

குருப்பெயர்ச்சி பலன்கள் விருச்சிகம்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2015-2016   விருச்சிகம் ராசி பலன்கள்
ராசி பலன் விருச்சிகம்

குரு 10க்கு வர,  தன-சுக-ரோக ஸ்தானம் பார்க்க

ஈசனாரொருபத்திலே தலையோட்டிலேயிரந்துண்டதும்.
போமப்பாயின்னமொரு புதுமை கேளுபொன்னுமே பால்மதிக்கு பதிதிலேற
ஆமப்பா ஆதிசிவன் தெருவுதோரும் அரகரா ஐயமெடுத் துணைரப்பா
ஊமப்பாஉத்தமனாயிருந்த புருஷன் உள்ளபடியுறுப்புண்டான்வினையினாலே
வேமப்பாவேந்தனுட ராசிகூர்ந்து விளம்புவாய்புவியோர்க்கு வினையத்தானே

10-ல் குரு வந்தால் சிவபெருமானே மண்டையோட்டில் பிச்சை எடுத்து உண்டார்.உத்தமன் புரூர மகாராஜா வெட்டப்பட்டான்.ஆகவே 10 -ல் குரு வந்தால் தொழில் கெடும், பதவி பறிபோகும், கவுரவக்குறைவு அளிப்பார்.பத்தில் குரு பதவிக்கு இடர் பழமொழிகள் இருக்கின்றன இதன் பலனை சொல்வதற்கு

1. தொழிலிலே கடும் போட்டி இருக்கும் ஆனாலும் சமாளித்து முன்னேற முயற்சிப்பீர்கள்.. வேலையிலே தடை, தடங்கள், தாமதம் போன்ற இடர்பாடுகள் இருக்கும். வேலைபளு மிகுந்திருக்கும். மேலதிகாரிகளின் தொல்லை தொடந்து வரும்.
2. வாக்கு வலிமையாகும். பேச்சாற்றல் மிகுந்திருக்கும். குடும்பத்தில் சுபிட்சமும் உற்றார் உறவினர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். தனம் அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனாலும் கொடுக்கல் வாங்கலில் சில்கல் வரும் சிரமம் தொடந்து வரும். காலம் கனியும் வரை கடன்படவும் நேரிடும். எதிரிகளிடம் சுமூக தீர்வு ஏற்படும்.
3. வாழ்க்கை துணைவராலே லாபமும் கிடைத்திடும். அவராலே நன்மையும் சில உண்டாகும். சில நேரங்களில் வாழ்க்கை துணைவரிடம் கருத்து வேறுபாடும் ஏற்படும். சண்டை சச்சரவுகளும் ஏற்படலாம். நண்பர்களாலே ஏமாற்றம் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
4. உடல் நலனில் குறையிருக்கும்.மருத்துவ செலவுகள் ஏற்படும். உற்சாகம் குறைந்திருக்கும். அத்தியாவசிய செலவுகளுக்காக கடன்பட நேரிடும்.
5. கல்வி விருத்தியுண்டு. வீடு கட்ட அல்லது வீடு புதுப்பிக்க யோகமுண்டு.இதற்கான செலவுகளும் ஏற்படும்.
6. ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நல்லோர் வழிகாட்டல் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் போட்டிகள் உருவாகிடும். உழைப்பு பெருகிடும். கடும் முயற்சியில் லாபம் அதிகமாக பெறலாம். தொழிலில் தீவிர கண்காணிப்பு அவசியம். பணியாளர்களிடம் அணுசரனையாக போக்கை கடைப்பிடிக்கவும். வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும் புதிய வாடிக்யைாளர்களை அதிகம் பெறுவதற்கும் தீவிர முயற்சி செய்து தொழிலில் முன்னேற பாருங்கள்.தொழிலில் உள்ள மேடுபள்ளங்களை அறிந்து கொள்ளவும் உலக உண்மைகளை புரிந்து கொள்ளவும் இந்த சமயத்தில் குரு பகவான் உங்களுக்கு சோதனைகளை தருவார். சோதனைகளை சாதனைகளாக்கும் திறனை பெற முயற்சி செய்யுங்கள். தொழில் அபிவிருத்தி பணிகளையும் மேற்கொள்வீர்கள்.

பணியாளர்கள் உத்தியோக உயர்வில்லை. ஊதிய உயர்வில்லை. முன்னேற்றம் தடையாகும். மேலதிகாரிகளின் அனுசரனை குறைவாகும். அவர்களின் கெடுபிடி அதிகமாகும். வேலை பளு அதிகரிக்கும். உங்கள் குறைகளை அக்கம் பக்கம் சொல்ல வேண்டாம். சக பணியாளர்களே கோள் மூட்ட தயாராக இருப்பார்கள்.  சக பணியாளர்களுடன் அணுசரித்து போய் அவர்களைின் உதவிகளை தேவையான சந்தர்ப்பங்களில் பெற தயாராகவே இருங்கள்.

பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். சொந்த பந்தம் அக்கம் பக்கம் நற்பெயர் வாங்குவது சிரமமாய் இருக்கும்.அனைவரிடமும் நன்றாக இனிமயாக பேசும் தன்மை ஏற்படும். செலவுக்கேற்ற பணம் சேகரிப்பதில் சிரமம் ஏற்படும். புதிய ஆடைகள் வாங்குவீர்கள். கணவன் மனைவி உறவில் பெரிய அளவில் விரிசல் வராது. சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள். பொறுப்புகள் மாறும். ஆதரவு குறையும். புகார் அதிகரிக்கும். நிதானத்துடனும் விவேகத்துடனும் மிகுந்த திறனுடனும் செயல்பட்டு மதிப்பு,மரியாதை, செல்வாக்கு பெற முயற்சி செய்யுங்கள்.

மாணவர்களுக்கு கல்வி மேம்படும். படிப்பில் அக்கறை ஏற்படும்.சக மாணர்களின் உதவிகளுடன் படிப்பில் சிறப்பாக விளங்க முயல வேண்டும்.  சிலருக்கு வெளிநாடு கல்வி யோகமும் கிட்டும். அக்கம்பக்கம் சண்டை சச்சரவுகளை தவி்ர்க்கவும். காதலில் விழ வேண்டாம். படிப்பில் கவனம் செலுத்தவும்.

விவசாய்களுக்கு அதிக செலவு, அதிக உழைப்பு இவைகளை பயன்படுத்தி உற்பத்தி அதிகரித்து வருமானம் உயர்த்த பாடுபட நேரிடும். அக்கம்பக்கம் உள்ள நிலம் நீர் பிரச்சனைகள் சுமூக பேச்சால் தீர்வாகும். நவீன படுத்தலின் மூலம் உற்பத்தியை அதிகரித்து அதிக லாபத்தை பெற முயற்சி செய்யுங்கள்.நிலம் கருவிகள் வாங்கி விவிசாய அபிவிருத்தி பணிகளை முடுக்கி வருமானம் பெருக முயற்சிசெய்யு்ங்கள.
.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற