menu

Friday 3 July 2015

ஏழரை சனி என்பது என்ன அதன் தொல்லைகள் எப்படி இருக்கும்?

ஜென்ம ராசிக்கு 12ல் சனி வந்துவிட்டால் ஏழரை சனி ஆரம்பிக்கும் காலம் வந்து விட்டது என்று பொருள். சனி ராசிக்கு 3,6,11 இடங்களில் சஞ்சாரம் செய்யும்பொழுது மட்டுமே நல்ல பலன்களை தரும்.  12ல் இருக்கும் பொழுது அது விரய சனி ஆகும். சண்டை சச்சரவுகள் நேரும் செலவுகள் ஏற்படும். நோய்களை உண்டுபண்ணி மருத்துவ செலவுகளையும் ஏற்படுத்தும். எதிரிகளால் தொல்லைகள் ஏற்படும்.  தந்தை வழியிலும் ஆன்மிக வழியிலும் பாக்கிய வழியிலும் நல்ல பலன்களை தராது. செலவுகளையே ஏற்படுத்தும் குடும்பத்தில் பிரச்சனைகளு உண்டுபண்ணும். வாயைக் கொடுத்து வம்பை  வாங்க நேரிடும்.  ஆக பேச்சுக்கு மரியாதை இருக்காது.  சொத்துக்குள் வீட்டிலுள்ள பொருட்கள் கைவிட்டு போகும். இப்படி இரண்டரை ஆண்டுகள் போய்விடும்.ஏழரை சனி

இதற்கடுத்து ஜென்ம சனி ஆரம்பித்து விடும்.   எடுத்த காரியம் வெற்றி பெறாது இழுபறியாகும் சாமானியமாக முடியாது சவ்வாக இழுக்கும். வாழ்க்கை துணைவர்களுடனும் நண்பர்களுடனும் கூட்டாளிகளுடனும் ஒற்றுமை பாதிக்கும். இதனால் பல பிரச்சனைகளும் சந்திக்க நேரிடும். தொழிலிலும்  பெரிய பாதிப்பை உண்டுபண்ணும். உடல்நிலை கெடும். வறுமை அளவுக்கு மீறி போகும். குடும்பத்தில் துக்ககரமான சம்பவங்கள் நிகழும். மனமும் உடலும் வாடிப்போகும். இப்படி இரண்டரை ஆண்டுகள் கஷ்டப்பட நேரிடும். ஆக மொத்தம் இப்பொழுது 5 ஆண்டுகள் கடந்திருக்கும். ஏழரை சனி

மீதி இரண்டரை ஆண்டுகளுக்கு சனி ராசிக்கு 2ல் இருக்கும்.
அவ்வப்பொழுது வாயு சம்பந்தப்பட்ட நோய்கள் வந்து போகும். சொத்து சேர்ப்பு பொருள் வரவு ஆகிய சமாச்சாரங்கள் இப்பொழுது இருக்கும். நண்பர்களின் உதவி ஓரளவுக்கு இருக்கும்.  அடுத்தவருக்கு பணம் தந்தால் திரும்ப வராது. அதனை கேட்டால் வீண் பிரச்சனைதான் வரும். ஏழரை சனி
ஏழரைசனி, ஏழரைசனி ஆல், ஏழரைசனியால் ஏற்படும், ஏழரைசனியால் ஏற்படும் பாதிப்புகள்



பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற