menu

Wednesday 24 June 2015

பாசத்தால் மோசம் போகக்கூடியவர் யார்? - ஜோதிட ஆராய்ச்சி

பாசத்தால் மோசம் போகக்கூடியவர் யார்? - ஜோதிட ஆராய்ச்சி

லக்னாதிபதி சுபராக இருந்து சுபர் சேர்க்கையோ,சுபர் பார்வையோ இருக்க ,4மிட அதிபதி சுபராக இருந்து, சுபர் சேர்க்கை சுபர் பார்வை பெற்றால் அவர்கள் மிகவும் பாசமாக இருப்பார்கள். ,மிகவும் இலகிய மனதுக்கு சொந்தக்காரர் அவர். அதாவது ஈவு, இரக்கம் மிகவும் அதகமாக இருக்கும் இந்த மாதிரி நபர்களுக்கு. லக்னத்திற்கு குரு சம்பந்தம் இருக்க பெற்றால் மிகவும் நேர்மையாக இருப்பார்கள். மேலும் இந்த அமைப்பு மீன ராசிக்காரர்களுக்கு அமையப்பெற்றால் எதிரியாகவே இருந்தாலும் அந்த எதிரியையும் மன்னி்த்து நண்பராக்கி கொள்ளும் குணம் நிறையவே இருக்கும்.

இந்தமாதிரி ஜாதகருக்கு 7மிடம் 6,8,12 மிடங்களோடு சம்பந்தம் இருந்தால் மனைவியாலும்,கூட்டாளியாலும் வெகுவாக அவமானப்பட்டும் நிறைய நஷ்டப்பட்டும் இருந்தாலும் கூட அவர்களை வெறுக்காமல் “சரி என்ன செய்வது அவங்களும் ஒரு உயிர். அவங்களுக்கும் ஒரு மனசு இருக்கு அந்த மனசு நம்மாள எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்றும் எதுவுமே அவங்க தப்பு இல்ல. அவங்களுக்கு அந்த தீய குணத்தை தந்தது இறைவன் தானே அதனால நாமே இறைவனைதான் வெறுக்கனுமேயொழிய நம்ம மனைவியை வெறுக்கக்கூடாது என்று மனைவியை மன்னித்துவிடுவார். கடவுளே இனியாவது என் மனைவிக்கு நல்ல குணத்தை தா என்று இறைவனிடம் வேண்டிக்கொள்வார்.

இந்தமாதிரி ஜாதகருக்கு 4மிடம் 6,8,12 மிடங்களோடு சம்பந்தம் இருந்தால் அன்னையாலும்,அன்னை ஸ்தானத்தில் இருப்பவராலும் வெகுவாக அவமானப்பட்டும் நிறைய நஷ்டப்பட்டும் இருந்தாலும் கூட அவர்களை வெறுக்காமல் “சரி என்ன செய்வது அவங்களும் ஒரு உயிர். அவங்களுக்கும் ஒரு மனசு இருக்கு அந்த மனசு நம்மாளாலே எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்றும் எதுவுமே அவங்க தப்பு இல்ல. அவங்களுக்கு அந்த தீய குணத்தை தந்தது இறைவன் தானே அதனால நாமே இறைவனைதான் வெறுக்கனுமேயொழிய நம்ம அன்னையை வெறுக்கக்கூடாது என்றும்” அன்னையை மன்னித்துவிடுவார். கடவுளே இனியாவது என் அன்னைக்கு நல்ல குணத்தை தா என்று இறைவனிடம் வேண்டிக்கொள்வார்.

இந்தமாதிரி ஜாதகருக்கு 3மிடம் 6,8,12 மிடங்களோடு சம்பந்தம் இருந்தால் இளைய சகோதரத்தால் வெகுவாக அவமானப்பட்டும் நிறைய நஷ்டப்பட்டும் இருந்தாலும் கூட அவர்களை வெறுக்காமல் “சரி என்ன செய்வது அவங்களும் ஒரு உயிர். அவங்களுக்கும் ஒரு மனசு இருக்கு அந்த மனசு நம்மாளாலே எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்றும் எதுவுமே அவங்க தப்பு இல்ல. அவங்களுக்கு அந்த தீய குணத்தை தந்தது இறைவன் தானே அதனால நாமே இறைவனைதான் வெறுக்கனுமேயொழிய நம்ம இளைய சகோதரத்தை வெறுக்கக்கூடாது” என்று இளைய சகோதரத்தை மன்னித்துவிடுவார். கடவுளே இனியாவது என் இளைய சகோதரத்துக்கு நல்ல குணத்தை தா என்று இறைவனிடம் வேண்டிக்கொள்வார்.

இதே மாதிரி 11 மிடம் அமைந்தால் மூத்த சகோதரத்துக்கும், 9மிடம் தந்தைக்கும் என எண்ணிக்கொள்ளுங்கள்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற