menu

Monday 22 June 2015

குருப்பெயர்ச்சி பலன்கள் தனுசு

குருப்பெயர்ச்சி பலன்கள் 2015 - 2016 ராசி பலன் தனுசு
தனுசு ராசி பலன்கள்
தனுசு குரு 9க்கு வர
தனுசு ராசிக்கு 1,3,5 க்கு பார்வையிட
1. ஊக்கமும் உடல் நலனும் தெளிவான தோற்றமும் ஏற்படும். முகம் பொலிவடையும். சொத்து சுகத்தை கிள்ளி தந்த குருபகவான் இனி அள்ளி தருவார்.
2. உங்களை அனைவரும் நேசிப்பார்கள். நீங்கள் எல்லோரிடமும் அன்பாக பழகுவீர்கள். உங்கள் எண்ணங்களிலும் செயல்களிலும் ஒரு மாற்றம் இனி இருக்கம். வீட்டில் இருப்போரின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வீண் வாக்குவாதங்கள் அகலும். குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் இருக்கும்.
3. எண்ணங்களில் உயர்வும் செயலிலே மேன்மையும் ஏற்படும். செய்யும் காரியங்களில் முயற்சியும் விவேகத்துடன் கூடிய வேகமும் சுகபோகமும், சௌரியமும் நல்லபடியாய் அமையும். நிலம் வீட வாகனம் நகை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. வங்கி கடனும் எளிதில் கிடைக்கும். தாயார் உடல் நலன் சிறக்கும்.
4. குழந்தை பாக்கியம் கிட்டும். தெய்வ பலம் கிட்டும்.
5. சொத்துக்கள் சம்பந்தப்பட்ட வில்லங்கம் அகலும்.
அடமானத்தில் இருக்கும் நகை வீடு முதலியன மீட்கப்படும். சண்டையிட்டு விலகியவர்கள் சமாதானம் ஆவார்கள். வராத கடனும் வந்துவிடும்.
நோய் தீரும். தண்டணையிலிருந்து விடுதலை கிடைக்கும். வழக்கில் தீர்ப்புகள் சாதகமாய் அமையும்.
6. மனம் விரும்பும் நல்வாழ்கை அமையும். திருமண யோகம் கிட்டும். வாழ்க்கைத் துணைவரின் உடல் நலம் நன்றாக இருக்கும். சண்டையால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். இனி வீட்டில் சுப காரியங்கள் நடக்கும்.
7. சிலருக்கு கோயில் கட்டும் யோகமும், சிலருக்கு கோயிலில், சங்கங்களில் கௌரவ பதவிகளும் கிடைக்கும். சிலருக்கு வெளியூர் வெளிநாடு செல்லும் யோகமும் கிட்டும்.
8. பணம் வரும். பதவி வரும். நல்ல பெயர் வரும். கௌரவம் மிகும். அந்தஸ்து அதிகரிக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். சொந்தபந்தம் நாடி வரும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். புதிய தொழில் துவங்கும் யோகமும் உண்டு.
9. மருத்துவ செலவு குறையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வட்டி செலவு, விரய செலவு முதலியன குறையும். பொருளாதார மேம்பாடு அமையும். ஊழியர்களுக்கு வேலை பளு குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திறமைக்கேற்ற மதிப்பு, மரியாதை கிட்டும். தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ற ஊதியம் கிடைக்கும். சம்பள உயர்வும் கிடைக்கும்.  மேல் அதிகாரிகளின் அனுசரணையான போக்கு இருக்கும். பணிமாற்றம், பதவி உயர்வு கிட்டும்.
10. நினைத்த காரியம் வெற்றியடையும் வேலை வாய்ப்பு கூடி வரும் சுயதொழில் கூடிவரும் . புத்தி தெளிவாகும் அறிவு மிகுந்திருக்கும்
புத்திசாலிதனமாக காரியங்களில் ஈடுபாடு மிகும். மதிப்பு மரியாதை கூடிவரும். தந்தை வழி நன்மை தரும். ஆன்மீகம் சிறக்கும்.

தொழில் வியாபாரம் மிக நன்றாக இருக்கும் செய்யும் காரியங்களிலே வெற்றி கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். தொழில் அபிவிருத்தியாகும். தொழிலுக்கு தேவையான கருவிகளையும் இடங்களையும் வாங்குவீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு அமோகமாக இருக்கும். எதை எப்படி செய்ய வேண்டுமோ அதை அப்படி திட்டமிட்டு வெற்றிபெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். அரசு மற்றும் வங்கி உதவிகளும் வெகு சிறப்பாக இருக்கும்.வாடிக்கையாளர்கள் நிறைய கிடைப்பார்கள். அவர்களை நீங்கள் வெகுவாக திருப்திபடுத்துவீர்கள். நல்ல பணியாளர்களின் ஒத்துழைப்பையும் அவர்களின் ஆதரவையும் பெறுவீர்கள்.
உங்களுக்கும் பணியாளர்களுக்கும் அணுசரனையான போக்கு இருக்கும். தொழில் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு மிக ந்னறாக செய்து வருவீர்கள்.

பணியாளர்கள் செய்யும் வேலைகளில் விவேகமாகவும் திறமையாகவும் செயல்படுவீர்கள். மேலதிகாரிகளிடத்திலும் சக ஊழியர்களிடத்திலும் உங்களுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வேலை பளு குறையும். ஊதிய உயர்வும் கிடைக்கும். விரும்பிய பணி இட மாறுதலும் கிடைக்கும். பாராட்டும் மரியாதைகளும் மேலிடத்திலிருந்து கிடைக்கும். எண்ணங்களும் செயல்களும் வேகமாகவும் விவேகமாகவும் இனி இருக்கும்.



பெண்கள் மனதில் உற்சாகம் கரை புரளும். மனதில் புத்துணர்ச்சி பெறுவீர்கள். முகம் ஒளி பெறும்,அழகு பெறும்.. கணவரை அனுசரித்து நடந்து நற்பெயரையும் அன்பையும் பெறுவீர்கள். செலவுக்கான பண வசதி எளிதாகவும் தாராளமாகவும் கிடைக்கும். இளம்பெண்களுக்கு நல்ல வரன் அமையும். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். அக்கம் பக்கம் நற்பெயர் கிடைக்கும் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். கணவன் மனைவி ஒற்றுமை வெகு சிற்ப்பாக இருக்கும்.மருத்துவ செலவுகள் குறையும். தேக ஆரோக்கியம் கூடும்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்திலும், ஆதரவாளர்களிடமும் நற்பெயர் கிடைக்கும். பெரிய பதவி தேடிவரும். உங்கள் செயலிலும் திறனிலும் பெரிய மாற்றம் இருக்கும். எதிரிகளும் விலகி செல்வர். அல்லது நட்பு பாராட்டுவர். அரசு அதிகாரிகளின் நட்பையும் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். திட்டம் தீட்டி செயல்பட்டு வருமானம் உயர்துவீர்கள். தாராள பணவரவு இருக்கும். மக்களிடையே உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். தொண்டர்களும் உங்கள் ஆணைகளை விரும்பி ஏற்று செயல்படுத்துவார்கள். உங்கள் திட்டங்களும்  நீங்கள் செய்யும் நல்ல பணிகளும் உங்களுக்கு நல்ல பெயரை வாங்கிதரும்
.

 மாணவர்கள் கல்வி மேம்படும். நற்பெயர் கிட்டும். வீட்டிலும் பள்ளியிலும் பாராட்டுக்களும், வெகுமதியும் கிடைக்கும். ஆசிரியர்களின் பரிபூரண உதவியும் கிடைக்கும். சக நண்பர்களிடம் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். சக நபர்களின் உதவியும் கிடைக்கும். காதலிலே விழ வேண்டாம் படிப்பு கெட்டுப்போகும். கல்வியில் கவனம் செலுத்தவும். எதிர்கால் பொற்காலமாக இப்பே உழைக்க தயாராகுங்கள்.

விவசாயிகள். விளைச்சல் அதிகரிக்கும். பயிர் பூச்சி தொல்லை மிகவும் குறைவாக இருக்கும். மகசூலுக்கு நல்லவிலை கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.விளைச்சலுக்கு தேவையான உரம் விதை பூச்சி கொல்லி மருந்து எளிதில் தாராளமாய் கிடைக்கும் விளைச்சலுக்கு தேவையான கடன் வசதியும் வங்கிகளில் தாராளமாய் கிடைக்கும். தொழிலாளர்களும் கருவிகளும் தேவைக்கேற்ப தேவையான நேரங்களில் கிடைக்கும். உற்பத்தி அதிகரி்த்து வாபம் நிறையக் கிடைக்கும். வீட்டுத்தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவீர்கள். மாடு, கன்று, நவீனக் சாகுபடி கருவிகள், நிலங்கள் என வாங்கி சந்தோஷமாக இருப்பீர்கள்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற